People's Watch in Media
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற பல்வீர்சிங், இந்த சித்ரவதையை அரங்கேற்றி வந்தி ருக்கிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் கூட இப்ப டிப்பட்ட சித்ரவதை இல்லை என மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறுகிறார். எந்த ஒரு புகார் வந்தாலும், அந்த புகாரின் பேரில் அழைத்து வரப்படும் நபர்களை இப்படித்தான் சித்ரவதை செய்தி ருக்கிறார் பல்வீர் சிங். பற்களை பிடுங்கு வதற்கு முன் அவர் செய்திருக்கும் காரியம் மிகப்பெரும் பயங்கரம். ஒன்றரை இஞ்ச் ஜல்லி கற்களை வாயில் போட்டு கடிக்கச் சொல்வாராம். முடியாது என்று சொன்னாலோ, தயங்கி நின்றாலோ அடித்து, துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கடிக்கச் சொல்வாராம். வேறு வழியின்றி, வலியால் துடி துடிக்க விசார ணைக்குச் சென்றவர்கள் கடிப்பார்களாம். ரத்தம் குடம் குடமாய் கொட்டும். பிறகு, கற்களை துப்பச் சொல்லி, பற்களை பிடுங்கி இருக்கிறார். செல்லத்துரை என்ற நபரின் மூன்று பற்களை பிடுங்கிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஒரு அடிதடி வழக்கில் விசாரணைக்குச் சென்ற இசக்கிமுத்து, செல்லத்துரை, மாரியப்பன் ஆகிய மூன்று சகோதரர்க ளையும் ஒரே அறையில் வைத்துக் கொண்டே, ஒவ்வொருவரது பற்களையும் பிடுங்கி இருக்கிறார். அவரது கால்களில் விழுந்து கெஞ்சிய பிறகும் கொடுமை நடந்திருக்கிறது. இரண்டு சிறுவர்கள் கூட இவரது கொடுமைக்கு தப்பவில்லை.
In a press statement, People’s Watch Executive Director Henri Tiphagne said it was an appalling statement in a country where freedom of expression and opinion was upheld as a fundamental right. He asked what the Association would have...
Human rights organisations and political parties are demanding that an FIR be filed against IPS officer Singh. Henri Tiphagne, executive director, People’s Watch, said that either the district collector or the superintendent of police should have obtained the CCTV...
பாஜகவின் இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது எம். எல். ஏ. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் கே. ஆர். ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பேராசிரியர் அருணன், மதிமுகவின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பூமிநாதன் எம். எல். ஏ. மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வே. கனியமுதன், மக்கள் விடுதலை கட்சியின் க. க. முருகவேள் ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம். எஸ். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
பிபிசி தமிழிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநருமான ஹென்றி டிஃபேன், முதல் முதலாக இந்த பல்பிடுங்கும் குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்த ஒருவர் விவகாரத்தில் காவல் நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் கழுவி அகற்றப்பட்டதாகவும், ஆனால், இந்த விவகாரம் குறித்து தனிப்பிரிவு காவலர்கூட எஸ்.பி.க்கு தகவல் தரவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் போகன் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.