மத நல்லிணக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும்
மக்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்
மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சு. வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், என் இறைவனுக்கும். என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனி மனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் கருதாமல், சமூக பிரச்சினையாக கருத வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.

