Media

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், MP அவர்களின் உரை

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது, அவர்களின் உரை

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் ஜோதி இறைப்பணி தவத்திரு திருவடிகுடில் சுவாமிகள் அவர்களின் தலைமை உரை

லாவண்யா மரணம் வழக்கு - சிபிஐ மற்றும் NCPCR விசாரணை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் YouTube சேனலுக்கு பேட்டி


புதிய தலைமுறை தொலைகாட்சி News360 நிகழ்ச்சியில் கருத்தரிப்பு சிகிச்சைக்கு பரோல் வழங்க மறுப்பு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன்

தமிழகத்தில் சமீபத்தில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்து நடைபெற்ற விவாதத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் - Behindhoods Air

முதல்வர் மூச்சுவிடாதது ஏன்? மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் (பீப்பிள்ஸ் வாட்ச்) அலுவலகத்தில் விசாரணை நடத்திய சிபிஐ, அந்த அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவும் செய்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக்கொள்கை, பீமா கோரேகான் சதி வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவைக்கு எதிராக ’பீப்பிள்ஸ் வாட்ச்’ தீவிரமாக களத்தில் நின்றதுதான் இதன் பின்னணி என்கிறார்கள். இதைக் கண்டித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்வினையாற்றி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதைக் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்களாம். கனிமொழி மூலமாகவும் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். ஆனால், இந்த விவகாரத்தில் மூச்சுவிடவில்லை முதல்வர். எதிர்க்கட்சியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம், ஆளும் கட்சியாக இருந்தால் அளந்துதான் பேசவேண்டும் என அவருக்குத் தெரியாதா என்ன!

முதலாளித்துவ சனநாயக நாட்டில் அரசதிகாரத்தின் மீறல்களைச் சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்போர் மீது பழிவாங்கல் நடவடிக்கை பாய்வதென்பது புதிதல்ல. வாடிக்கையான ஒன்றே! இந்த வரிசையில் இப்போது மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசதிகாரம் பாய்ந்துள்ளது. மனித உரிமைத் தளத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்திய அரசமைப்பினுடைய சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் கடந்த 8.1.2022 அன்று மத்திய புலனாய்வுத் துறையினர்(CBI) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடுநிலையுடன் செயற்படவேண்டிய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாய் முதல் தகவல் அறிக்கையில் உள்ளபடி சேதி வெளியிட்டன. இது மக்கள் கண்காணிப்பகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே உண்மையை உலகறிய உரக்கச் சொல்ல வேண்டியது காலத்தின் அவசியம். .................................

10 லட்ச ரூபாய் கொடுத்தால் போதுமா? - நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம் - அறக்கலகம் டிவிக்கு திரு. ஹென்றி திபேன் அவர்களின் பேட்டி