தருமபுரி: ஆந்திராவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.