Media
காவல்துறை விசாரணையில் அஜித் குமாருக்கு நடந்தது என்ன? – நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்த பகீர் உண்மை அஜித் குமார் உடலின் 44 இடங்களில் காயங்கள், முகம், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய காவல்துறை. காவலர்களால் தாக்கப்பட்டு திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையின் போது கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. அப்போது, நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் எனவும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிட்டார். அப்போது, காவல்துறையிடம் ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கவில்லை என்றும் சிசிடிவி பதிவு செய்யக்கூடாது என்பதற்காக வெளி இடத்தில் வைத்து அடித்தார்களா எனவும் காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறிய நீதிபதிகள், 44 இடங்களில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு உடல் முழுவதும் அஜித்குமார் தாக்கப்பட்டுள்ளதாகவும், முகத்திலும், பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தூவி துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
திருப்புவனம் கஸ்டடி மரண வழக்கு "நீதிமன்றத்தில் நடந்தது என்ன?'' விரிவாக சொன்ன வழக்கறிஞர் ஹென்றி "முக்கிய சாட்சியாக அமைந்த 17 விநாடி வீடியோ" கோவில் ஊழியர் கழிவறையில் இருந்து எடுத்த 17 விநாடி வீடியோ முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது... வழக்கறிஞர் ஹென்றி திபேன் தகவல்...
மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது : லாக் அப் மரண வழக்கில் நீதிபதிகள் வேதனை! திருப்புவனம் இளைஞர் லாக் அப் மாரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது’ என வேதனை தெரிவித்துள்ளது. judges order in youth ajithkumar lockup death case சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது. .............................................................................. அப்போது மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, ”அஜித் குமார் மரணத்திற்கு பிறகு திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்று, 50 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக கூற வேண்டும் என்றும் சமரசம் பேசியுள்ளனர்” என்று வாதம் முன்வைத்தார். ...........................................................
லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. .................................................................. தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது உடல் மதுரை கொண்டு வரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28-ம் இரவு 12 மணி வரை தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., அஜித்தின் அம்மாவிடம், உங்கள் மகன் இறந்து விட்டார் என கூறியுள்ளார் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர். ...........................................
அஜித்குமார் லாக் அப் மரணம் – சாட்சியங்கள் எங்கே? அழித்துவிட்டீர்களா? : போலீஸுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி! அஜித்குமார் லாக் அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ajithkumar lock up death chennai high court order சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடபுரத்தைச் சேர்ந்த அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில், ஜூன் 27ஆம் தேதி மானாமதுரை உட்கோட்ட சிறப்பு படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ......................................................................... இந்த வழக்கு விசாரணையின் போது, மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, “காவல்துறையினர் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளை கொண்டு தாக்கியுள்ளனர்” என்று கூறி சில புகைப்படங்களை தாக்கல் செய்தார். போலீசார் அஜித் குமாரை தாக்கும் வீடியோவும் போட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன், “முதலில் தென்னை தோப்பில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். போலீசார் அஜித்குமாரை தாக்கும் போது, அந்த சமயத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் தான் இருந்துள்ளார். அஜித் குமார் இறந்த பிறகு அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அஜித் குமாரின் தாயாரும் சகோதரரும் 28ஆம் தேதி இரவு 12 மணி வரை மகன் குறித்து போலீசாரிடம் கேட்டுள்ளனர். அப்போது திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்பி, அஜித் குமார் அம்மாவிடம் உங்கள் மகன் இறந்துவிட்டார் என தெரிவித்திருக்கிறார்” என வாதங்களை முன் வைத்தார். ...................................................................
போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் | Ajithkumar Case சிவகங்கை, திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை அமர்வு விசாரித்தது. அது தொடர்பான விவரங்களை வக்கீல் ஹென்றி திபேன் கூறினார்.
