for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

4 Nov 2023 துப்பாக்கிச்சூடு வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு! People's Watch in Media

உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்ற அறிக்கை தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து அறிக்கை ஏதும் கிடைக்கப்பெறவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
4 Nov 2023 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..! People's Watch in Media

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலர் தன்னிச்சை போராட்டம் நடத்தினர். அச்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
3 Nov 2023 தூத்துக்குடி துப்பாக்கிசூடு: நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு! People's Watch in Media

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு


Join us for our cause