Media
The complaint also alleged that the association used foreign contributions for a purpose other than “for which it was received” The Central Bureau of Investigation (CBI) has registered a case against Madurai-based Centre for Promotion of Social Concerns...
மதுரை: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது எட்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற வேண்டும் என்றால் அவை மத்திய அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இதற்கான உரிமத்தைப்...
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் 'People's Watch' என்ற தொண்டு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடை மற்றும் பல்வேறு வகையில் நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைக் கொண்டு குழந்தைகள், முதியவர்கள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கு காப்பகங்கள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்குண்டான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், CPSC அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் கோடிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் நன்கொடை பெற்றதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதையும், முறையான அனுமதி பெறாததையும் உறுதி செய்து சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரைத்தது. அதனடிப்படையில் சி.பி.ஐ இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டதில் CPSC அறக்கட்டளை மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 'People's Watch' தொண்டு நறுவனம் கடந்த 2005-2006, 2010-2011 மற்றும் 2012-2013 காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பலமுறை உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கோடிக் கணக்கில் பணம் நன்கொடை பெற்றுள்ளதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் CPSC அறக்கட்டளை மற்றும் 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் முறைகேடு செய்துள்ள பண மதிப்பு குறித்து விசாரணை முடிவுக்குப்பின் தெரிவிக்கப்படும் எனவும் சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கோயம்புத்தூர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் திரு.மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து திரு. ஆண்டியப்பன், திரு.பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர். இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும். அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்கிற அரசின் கண்ணோட்டத்திற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து அவர்கள் தண்டனை பெற்ற வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. ................... ஒருங்கிணைப்பு மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மக்கள் கண்காணிப்பகம் (People's Watch) தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சோகோ அறக்கட்டளை
The Central Bureau of Investigation (CBI) today had arrived at People’s Watch (PW) in Madurai at around 10:50 AM with a search warrant following the CBI Court, Madurai an FIR on January 7th, 2022. The FIR pertains to...
Is India targeting foreign-funded NGOs? On Thursday, January 6 at 19:30 GMT: Thousands of NGOs in India, including internationally-known groups, face an uncertain future after losing government licences that allow them to tap into foreign...
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே இதன் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை விரைந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், நீதிமன்றங்கள் மூடப்பட்டு இணையவழியில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள், பொது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகளை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்நெறிமுறைகளை மீறும் சிலவற்றையும் சமூக அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது. பள்ளிகள் மூடப்படும் நேரத்தில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஏன் நடத்தப்படுகின்றன? ஒருபக்கம் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு எல்லாவற்றையும் மூடுங்கள் என்று உத்தரவிடும் அரசு மறுபக்கம் மதுரைக்கும், தென் மாவட்டங்களுக்கும் பிரதமர் வருகை, முதல்வர் வருகை என மக்கள் கூட்டத்தைக் கூட்ட முயற்சிப்பது முரண்பாடாக உள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுகிறது என்பது உண்மை என்றால் பெருந் திரளாய் மக்களைக் கூட்டும் அரசியல் நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தேவையற்ற ஒன்றாகும். எனவே மக்கள் கூடும் பொது நிகழ்வுகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதே போன்று மக்களை நேரிடையாகச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் பணிகளையும், இதே காரணத்திற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கை திரும்பும் வரைத் தள்ளிப்போடுவதில் எந்த அச்சமும், ஆளுங் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இருக்கக் கூடாது. மக்களின் உடல் நலனே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் பாரதிய சனதா கட்சி சார்பில் மதுரையில் பொங்கல் விழா கொண்டாடப்படும், அதில் பாரத பிரதமர் கலந்து கொள்வார் என்று கூறும் அதே நேரத்தில், இத்தகைய நிகழ்வு ஒமைக்ரான் பரவலை அதிகப்படுத்தும் என்பதில் அக்கட்சியினர்க்கே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே தயை கூர்ந்து அக்கட்சியின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வைத் தடுத்து, ஒமைக்ரான் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொங்கல் விழாவின் போது பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு பிடிப்பவர்கள், மாடு விடுபவர்கள், உள்ளூர் மக்கள், பல்துறை அதிகாரிகள் போன்றோர்க்கு மட்டும் சிறப்பு அடையாள அட்டையுடன், தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும். மற்றவர்கள் நிகழ்ச்சியைக் காண தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதே போன்று கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அதன் நிர்வாகிகள் தாமாக முன்வந்து கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போல் வெளிமாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முறையான தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் கண்டிப்பாக உறுதி செய்ய அனைத்து மாநில எல்லைகளிலும் அதிகாரிகளையும், மருத்துவர்களையும் நியமனம் செய்து தமிழ் நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம். இதே போன்று எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் மத நிகழ்வுகளை நடத்தும்போது கூட்டம் சேர்வதைத் தவிர்க்கும் நடைமுறையை ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை தாமாகவே முன் வந்து கடைப்பிடிக்க வேண்டும். ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றிருக்கும் மருத்துவ கல்லூரிகளை முறையாகத் திறந்து வைக்க வருகிற 12.1.2022 அன்று பாரதப் பிரதமர் விருதுநகர் வருகிறார் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கான இடத்தைத் தெரிவு செய்யும் பணியில் தமிழக அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரத பிரதமரும், தமிழ் நாடு முதல்வரும் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை இந்நிகழ்வுகளை ஒத்தி வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் இந்நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாதரணமாக மக்கள் அதிக அளவில் கூடுகின்ற பகுதிகளில் அரசதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல் குடிமைச் சமூக அமைப்புகள், வியாபாரிகள் (காய்கறி, பூ, ஜவுளி,மீன்) சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் போன்றவை தாமாக முன்வந்து மக்கள் அதிக அளவில் மக்கள் கூடுவதைக் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கிருமினாசினியால் கைகளைச் சுத்தப்படுத்துதல் போன்றவற்றைப் பயன்படுத்தும் தமிழகமாக, அரசிற்கும், காவல்துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக அனைவரும், அனைத்துக் கட்சிகளும், குடிமை சமூகங்களும், இயக்கங்களும் இணைந்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கேட்டுக் கொள்கிறது. இப்படிக்கு, ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர் மக்கள் கண்காணிப்பகம்
Human rights activists and tribal association have urged the State government to release the brother of slain forest brigand Veerappan and two of his associates who were in the Coimbatore Central Prison for the last 33 years. People’s...
Human rights activists and tribal association have urged the State government to release the brother of slain forest brigand Veerappan and two of his associates who were in the Coimbatore Central Prison for the last 33 years. People’s...