Media
கரூர்: ''சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை தொடர்பான, உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும்'' என, உண்மை கண்டறியும் குழு தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அப்துல் சமது தெரிவித்தார். கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, காளிப்பாளையத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோத கல்குவாரியை எதிர்த்து போராடி வந்த நிலையில் கடந்த, 10ம் தேதி, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அப்துல் சமது தலைமையில், உண்மை கண்டறியும் குழுவினர், ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட இடம், கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு, கரூரில் அப்துல் சமது நிருபர்களிடம் கூறியதாவது: சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை வழக்கில், உடனடியாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதை வரவேற்கிறோம். மேலும், கொலை வழக்கில் பலருக்கு தொடர்பு இருந்தால், கைது செய்ய வேண்டும். க.பரமத்தி பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. அதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எந்த குவாரிகளிலும் தகவல் பலகை இல்லை. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்மட்ட குழுவை அமைத்து, விசாரித்து, சட்ட விரோதமான கல் குவாரிகளை மூட வேண்டும். மேலும், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும். இதுதொடர்பாக சட்டசபையிலும் பேசுவேன். கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்துக்கு, 50 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். கல் குவாரிகள் உள்ள பகுதிகளில், சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வைத்து, பாறைகளை உடைக்கின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் சொல்லும், விதிமுறைகளுக்கும், கல் குவாரிகளில் நடக்கும் செயல்களுக்கும் முரண்பாடு உள்ளது. இதையெல்லாம், முதல்வர் ஸ்டாலின் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
A fact-finding team on Saturday urged the Tamil Nadu government to expedite the investigation into the recent murder of activist R. Jaganathan of Kalipalayam in Karur district, who was run over by a truck belonging to a stone quarry...
மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது. கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களி டம் அவா் தெரிவித்தது: மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம். இதில் ஏராளமா ன கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறை ள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா , குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வை யில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் என்றாா் அவா் . பேட்டியின் போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினா சாமி ஆகியோா் உடனிருந்தனா்
2002ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் பில்கிஸ் பானுவை, கூட்டு வல்லுறவு செய்து 11 பேரை படுகொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்விடுதலை நீக்கம் செய்திடக் கோரி... 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் மீது வடிக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி... காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இன்று காலை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.