for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

25 Jun 2021 Anti-Sterlite protest: Madras HC asks NHRC to submit its probe report on 2018 police firing People's Watch in Media Madurai, Tamil Nadu

The Madras High Court on Friday directed the National Human Rights Commission (NHRC) to submit a copy of its investigation report into the police firing that took place in Thoothukudi in 2018 during the anti-Sterlite protests. ...

##IndiaToday, ##NationalHumanRightsCommission, ##ThoothukudiPoliceFiring, ##SterliteProtest, ##HenriTipahgne, ##AdvocateHenriTiphagne, ##PeoplesWatch
25 Jun 2021 இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.. இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி.! People's Watch in Media Madurai, Tamil Nadu

எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்.  தூத்துக்குடியில் எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.  மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழக முதன்மைச் செயலாளர் தரப்பில், செப்டம்பர் 2018-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018-ல் வழக்கை முடித்துவைத்தது. தேசிய மனித உரிமை ஆணையப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.   இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

#AsianetNews, #NHRC, #Sterlite, #ThoothukudiKilling, #PoliceFiring, #ThoothukudiPoliceFiring, #HighCourtOrder, #NationalHumanRightsCommission
15 Jun 2021 விசாரணைக்கு சென்ற இளைஞர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் People's Watch in Media Madurai, Tamil Nadu

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன். இவரை கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் கடந்த 2019-ல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாலமுருகன் மர்மமான முறையில் இறந்தார். விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் பாலமுருகன் இறந்ததாகவும், பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முத்துக்கருப்பன் மனு தாக்கல் செய்தார். பின்னர் இவர் மனுவை திரும்பப் பெற்றார். இந்நிலையில் போலீஸார் மிரட்டியதால் மனுவை முத்துக்கருப்பன் திரும்பப் பெற்றதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் புகார் அளித்தார். இதையடுத்து பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றிடிபேன் கேட்டுக் கொண்டார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

#TheHindu, #HighCourtOrder, #HenriTiphagne, #People'sWatch, ##BalamuruganCustodialDeath, ##Avaniyapuram, #MaduraiBenchoftheMadrasHighCourt, #Direction, #InterimOrder, ##AdvocateHenriTiphagne
6 Jun 2021 அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கக் கோரும் மக்கள் கண்காணிப்பகம் People's Watch in Media Madurai

தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், "தேர்தல் காலத்தில், திமுக சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களுக்கு குடிமைச் சமூகத்தைச் சார்ந்தோர், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வளர்ச்சிப்பணியில் திறன்படைத்தோர் போன்றோர் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இவர்களை அடையாளங்கண்டு, கடந்த காலத்தில் சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பெற்ற ஆலோசனைக்குழுவைப் போல் வெவ்வெறு துறைகளில் திறன் படைத்தோர் அடங்கிய ஒரு மாநிலக்குழுவை அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு உதவியாக ஒரு துணைக் குழுவையும் அமைக்கவேண்டும். இக்குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு மக்கள் நலன் சார்ந்தவற்றை அரசின் கவனத்திற்கு தொடர்ந்து எடுத்துரைத்து அதற்கான பரிந்துரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். இறுதியாக எதிர்க்கட்சியினர் முதல் நூறு நாட்கள் அரசுடன் இணைந்து செயல்படுவது அரசியல் நாகரிகம் என்று எடுத்துரைக்கிறோம். ஜனநாயக நெறிமுறைகளுக்கிணங்க அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவேண்டும். மக்கள் பணியில் அறமற்ற செயல் பொருளற்றது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் அண்மையில் திமுக அரசு அறிவித்த அறிவிப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அதற்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

#ETV, #PeoplesWatch, #MKStalin, #CM TamilNadu
6 Jun 2021 அரசுக்கு ஆலோசனை- சமூக செயற்பாட்டாளர்கள் குழு அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஹென்றி திபேன் வேண்டுகோள் People's Watch in Media Madurai

சென்னை: தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். இது...

#ThatsTamil, #OneIndia, #MKStalin, #Appeal, #GovtofTN
3 Jun 2021 Forum expresses shock over NHRC appointments People's Watch in Media Madurai, Tamil Nadu

The All India Network of NGOs and Individuals working with the National and State Human Rights Institutions (AiNNI) expressed shock and raised concerns over the procedure adopted for the recent appointments in the National Human Rights Commission (NHRC). ...

#TheHindu, #AiNNI, #NHRC, #ArunMishra, #NHRCChair
23 May 2021 ‘Constitute a fresh commission of inquiry’ People's Watch in Media Madurai, Tamil Nadu

Disappointed over the inquiry being conducted into the 2018 Thoothukudi firing that claimed the lives of 13 people protesting against Sterlite Copper, Madurai-based NGO People’s Watch has asked the government to constitute a fresh commission of inquiry.

#TheHindu, #HenriTiphagne, #ThoothukudiPoliceFiring, #PoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #ThreeYearsAfterThoothukudiBurned
23 May 2021 Citing slow work, NGO says wind up panel’s inquiry into Sterlite protest People's Watch in Media Madurai

The Madurai based network towards human rights monitoring, ‘People’s Watch’, has sought the new government in Tamil Nadu to immediately pass orders for the discontinuation of the inquiry commission led by retired Justice Aruna Jagadeesan into anti-Sterlite protest in...

#DTNext, #Sterlite, #ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, #PoliceFiring, #Thoothukudi


Join us for our cause