for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

19 Nov 2021 Re-post mortem of Pudukai fisher done People's Watch in Media Trichy

The body of a fisherman from Pudukkottai was exhumed on Thursday for re-post mortem as per the direction of the Madurai Bench of Madras High Court after the wife of the deceased raised suspicion over the cause of death....

#media
18 Nov 2021 இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை தோண்டி எடுத்து மறு பரிசோதனை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடந்தது People's Watch in Media Pudukottai

கோட்டைப்பட்டினம்: மீனவர் சாவு புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த மாதம் 18-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலால் மோதினர். இதில் படகு தண்ணீரில் மூழ்கியதில் மீனவர் ராஜ்கிரண் (வயது 30) உயிரிழந்தார். பின்னர் இலங்கையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில்அடக்கம் செய்யப்பட்டது.  ஐகோர்ட்டு உத்தரவு  இந்நிலையில் இறந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன்னுடைய கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ராஜ்கிரணை அடக்கம் செய்யும் போது, அவரது உடலை முழுமையாக பார்க்க அனுமதிக்கவில்லை. ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை, அவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்று இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்கிரணின் உடலை மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும் ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா? அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மீனவர் உடல் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.  உடல் தோண்டி எடுப்பு  இதனைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் நேற்று மீனவர் ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுக்கும் பணியை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற தடயவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன், மணமேல்குடி தாசில்தார் ராஜா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மனுதாரர் தரப்பில் ராஜ்குமார் மனைவி பிருந்தா, மீனவர் காப்போம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தர்மதுரை, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.  மீண்டும் பிரேத பரிசோதனை  பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிபடுத்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தாவை அடையாளம் காட்டச் சொன்னார்கள். ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, எனது கணவரின் 2 கைகளிலும் பச்சை குத்தி இருக்கும் என்று கூறினார். பின்னர் அவர் உறவினர் ஒருவர் அருகே வந்து 2 கைகளையும் பார்த்தார். 2 கைகளிலுமே பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் மறு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ராஜ்கிரண் உடல் மீண்டும் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர் வரவில்லை ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரது பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை. ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் ராஜ்கிரணின் பெற்றோர்களுக்கு உடன்பாடு கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் உடல் தோண்டி எடுக்கும் இடத்திற்கு ராஜ்கிரண் பெற்றோர்களோ அல்லது ராஜ்கிரண் உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#media
18 Nov 2021 Over 200 civil society leaders write to CJI urging hearing of pending key constitutional matters in SC People's Watch in Media Mumbai

Over 200 civil society leaders have written a joint petition to the Chief Justice of India requesting listing of important pending constitutional matters including CAA, Abrogation of Article 370, farm laws, continued misuse of UAPA etc. “We request...

#CJI, #ChiefJusticeofIndia, #SupremeCourt, #CSO, #CivilSocietyOrganisation, #NationalHerald
18 Nov 2021 மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுகூராய்வு People's Watch in Media Pudukottai

இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுகூராய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர். ராஜ்கிரண் (30) எஸ்.சுகந்தன் (30) ஏ. சேவியர் (32) ஆகியோர் அக்.19ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனர். அதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. சுகந்தன், சேவியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அக்.23ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரண் உடல் கடல் வழியாக கொண்டுவரப்பட்டு கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கிரனின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அதனால் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும்  மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3ஆம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் ராஜ்கிரண் மனைவி பிருந்தா உள்ளிட்டோர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பிருந்தா மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மீனவர் ராஜ்கிரணின் உடலைத் தோண்டி எடுத்து மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு தடயவியல்துறை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோர் மறு உடற்கூராய்வை மேற்கொண்டனர். சுமார் இரண்டுமணி நேரத்தில் உடல் மீண்டும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூராய்வு அறிக்கை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

#media
18 Nov 2021 Re-post mortem of Pudukai fisher done People's Watch in Media Trichy

The body of a fisherman from Pudukkottai was exhumed on Thursday for re-post mortem as per the direction of the Madurai Bench of Madras High Court after the wife of the deceased raised suspicion over the cause of death....

#media
18 Nov 2021 உயிரிழந்த மீனவர் உடல் மறு பிரேதப் பரிசோதனை: நவ.24-ல் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் People's Watch in Media Pudukottai

இலங்கை ரோந்துக் கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை, வரும் 24-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்.ராஜ்கிரண் (30), எஸ்.சுகந்தன் (30), ஏ.சேவியர் (32). இவர்கள் மூவரும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துப் படகு மூலம் மீனவர்கள் படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இதில், மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதோடு மீனவர் ராஜ்கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயர் தப்பிய மீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து பின்னர் விடுவித்தனர். இதையடுத்து, அக்.23-ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரைக் கொலை செய்திருக்கலாம் எனவும், எனவே அவரது உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3-ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம், ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பிருந்தா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வட்டாட்சியர் முன்னிலையில் மறு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில், மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட ராஜ்கிரணின் சடலத்தைத் தடயவியல் துறை மருத்துவர்கள் தமிழ் மணி, சரவணன் ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், கூடுதல் சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான அறிக்கை வரும் 24-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

#media


Join us for our cause