Media
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_701.jpg?itok=oMiuML6V)
மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது. கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களி டம் அவா் தெரிவித்தது: மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம். இதில் ஏராளமா ன கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறை ள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா , குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வை யில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் என்றாா் அவா் . பேட்டியின் போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினா சாமி ஆகியோா் உடனிருந்தனா்
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_698.jpg?itok=LQrErjD7)
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_712.jpg?itok=rygHgd1Z)
2002ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் பில்கிஸ் பானுவை, கூட்டு வல்லுறவு செய்து 11 பேரை படுகொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்விடுதலை நீக்கம் செய்திடக் கோரி... 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் மீது வடிக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி... காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_696.jpg?itok=_sVIFbzP)
புதுச்சேரியில் அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இன்று காலை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_715.jpg?itok=ozMTIc61)
Mr. Henri Tiphagne's speech - SAVE DEMOCRACY SAVE FEDERALISM - TAMILNADU LAWYERS CONFERENCE organised All India Lawyers Council Tamil Nadu at Chennai on 27.08.2022
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_694.jpg?itok=knzXMFyc)
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_706.jpg?itok=NnmKmdw6)
தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் வகையில் குற்றவாளிகள் 27பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்.சின்னராசா மற்றும் இணைந்து செயல்பட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு சிவில் சமூக அமைப்பினர்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய பாராட்டுவிழா.
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/default_images/thumbnail.png?itok=5G5ytedH)
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/PWInMedia_3_710.jpg?itok=2pXFlokc)
தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் வகையில் குற்றவாளிகள் 27பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்.சின்னராசா மற்றும் இணைந்து செயல்பட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு சிவில் சமூக அமைப்பினர்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய பாராட்டுவிழா.
![](https://peopleswatch.org/sites/default/files/styles/news-item-thumbnail/public/default_images/thumbnail.png?itok=5G5ytedH)