for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

1 Jul 2024 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் - நீதிபதிகள் கருத்து People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை" அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என துணை காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்று மனுதாரர் கூறியுள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது என சிபிஐ தரப்பு கூறியுள்ளது.  

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு


Join us for our cause