Media
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற நாளின் காவல் நிலைய சி.சிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை அறிக்கையை வழங்கக் கோரிய மனுவில், விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி இந்த வழக்கு விசாரணையின் போது உயர நீதிமன்றத்தில் அமுதா ஐஏஎஸ் அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே. அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
A team of advocates including Henry Tiphagne, Vanchinathan, Selva Gomathy and members of civil societies including People’s Watch, Society for Community Organisation Trust, People’s Right Protection Organisation submitted a petition to Madurai police commissioner J Loganathan on Friday seeking...