தமிழ்நா ட்டிற்கு புதிய டிஜிபி நியமனத்தில் தா மதம் ஏன்? முழு விவரம்
தமிழ்நாட்டில் காவல்துறை தலைவரான, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தை முன்வைத்து தி.மு.க அரசு மீது அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சேர்ந்த 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், கடந்த செப்டெம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
பொறுப்பு டிஜிபி நியமனம்.. தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு
டெல்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல்செய்துள்ளார்.
பொறுப்புடிஜிபிநியமனம்... குவியும் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் முறையீடு!
தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப்டம்பர்2) முறையீடு செய்யப்பட்ட நிலையில், மனுத்தாக்கல்செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பணிஓய்வு பெற்றார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசுஉத்தரவிட்டது. இது பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.