தமிழ்நா ட்டிற்கு புதிய டிஜிபி நியமனத்தில் தா மதம் ஏன்? முழு விவரம்
தமிழ்நாட்டில் காவல்துறை தலைவரான, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தை முன்வைத்து தி.மு.க அரசு மீது அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சேர்ந்த 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், கடந்த செப்டெம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
'டிஜிபி பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதிய நியமனம் தொடர்பாக தகுதியுள்ள நபர்களின் பெயர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைத்துக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தமிழ்நாடு அரசு செய்யவில்லை' என, மனுவில் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.
