for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

6 May 2023 இந்திய காவல் பணி அதிகாாிகள் சங்கத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் திறந்த மடல் Press Releases

தாங்கள், கடந்த 04.04.2023 அன்று "திரு.பல்வீர்சிங் I.P.S., என்பவருக்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் (Media Trial) நடக்கின்றது" என்ற தலைப்பில், பொதுநல நோக்குடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அறிக்கையை இன்னாருக்குத் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே தாங்கள் அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாகக் கொண்டு, தற்போது அந்த உரிமையோடு, தாங்கள் எப்படி வெளிப்படையாக திரு. பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் பகிர்ந்தீர்களோ! அதே போல் நாங்களும் திரு.பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கின்றோம். எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையானது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும். தமிழ்நாட்டில் இவ்வாறு காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்சனைகள் வெளிப்பட்டு வரும் போது அவை தொடர்பாக "காவல்துறை அதிகாரிகளின் சங்கம்" என்ற பெயரில், யாரும் அதில் தலையிட்டு கருத்து சொன்னதில்லை. எனவே முதன்முறையாக, அதுவும் காவல்துறையின் உயர்கல்வித் தகுதியான I.P.S தகுதி பெற்ற அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படி ஒரு அறிக்கை வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அந்த அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.

#media
6 May 2023 ஏஎஸ்பி, போலீசார் மீது 3வது வழக்கு பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐஜி தலைமையில் விசாரணை: பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சிபிசிஐடியிடம் மனு People's Watch in Media Tirunelveli

அருண்குமாரின் சகோதரர், 17 வயது சிறுவன், அவரது தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், மாடசாமியுடன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்கள் ஏடிஎஸ்பி சங்கரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘ஐஜி தலைமையிலான அதிகாரியின் மேற்பார்வையில் விசரணை நடத்த வேண்டும். அப்போதுதான் விசாரணைக்கு சாட்சிகள் ஒத்துழைப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் விசாரணை நேற்று நடைபெறவில்லை.

##மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன் #ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##CBCIDTamilNadu, ##CBCIDTN, ##CBCIDTirunelveli, ##CBCIDNellai, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
6 May 2023 People’s Watch open letter to IPS officers’ Association, Tamil Nadu Chapter Press Releases

You have issued a statement dated 04.04.2023 titled Media trial regarding an allegation of Custodial Violence against Mr. Balveer Singh, IPS, due to public interest. You addressed the statement to “Dear All” without specifying any name. So, we have...

#media
6 May 2023 பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோருடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் People's Watch in Media Tirunelveli

வழக்குரைஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புகார் அளித்துள்ள அருண்குமார் வெளியூரில் வசித்து வருவதால், விசாரணைக்கு வர இயலவில்லை. நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் எதுவும் அளிக்கவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை வழக்கின் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெறும். நாங்கள் அச்சமின்றி சாட்சி சொல்ல வர முடியும். அதன்பின்னரே நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்போம் என எழுத்துப் பூர்வமாக மனு அளித்துள்ளோம் என்றார்.

##மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன் #ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##CBCIDTamilNadu, ##CBCIDTN, ##CBCIDTirunelveli, ##CBCIDNellai, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
6 May 2023 பல் பிடுங்கி பல்வீர் சிங் மனைவி தற்கொலைக்கு முயற்சியா? ஹென்றி திபேனின் பரபரப்பு கடிதம்! People's Watch in Media Madurai

இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்திற்கு, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், ஹென்றி திபேன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

##மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன் #ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##CBCIDTamilNadu, ##CBCIDTN, ##CBCIDTirunelveli, ##CBCIDNellai, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்


Join us for our cause