for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

24 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணையை விரைவுபடுத்த மனித உரிமைகள் வழக்கறிஞர் கோரிக்கை People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் நீதிபதி ஆணையம் விரைவில் அதன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹென்றி கோரியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. ...

#BBCTamil, #HenriTiphagne, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, #ThoothukudiPoliceFiring
24 Aug 2021 Tuticorin firing: Plea to expedite inquiry People's Watch in Media Thoothukudi

Tuticorin: The 29th sitting of one-member commission of inquiry headed by retired Justice Aruna Jagadeesan into the police firing that claimed 15 lives during the anti-Sterlite protest on May 22, 2018, began here on Monday. 58 people have been...

##TimesofIndia, #PoliceFiring, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!! People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு உயிரழப்பு, காயங்கள் ஏற்பட்டன. மேலும் பொது மற்றும் தனியார்  சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. அவை குறித்து விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில் தனது இடைக்கால அறிக்கையை அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தார். ஆணையத்தின் 29ஆவது கட்ட விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

#Dinamani, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #Thoothukudi, #CommissionofInquiry
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2018 மே 22ம் தேதி போராட்டக்காரர்களை தமிழக காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். மேலும் மக்கள் மீது வன்முறையை செலுத்தினர்.இந்த சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 102 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும் இறந்த 13 நபர்களின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ அரசின் மீதும் காவல்துறை மீதும் வழக்கு தொடுத்தனர். இது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.இவரது தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் சமீபத்தில் தனது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தார். இந்த விசாரணை ஆணையம் பல்வேறு தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 28 கட்டங்கள் விசாரணை நடந்து முடிந்துள்ளது.இந்த விசாரணையின் முக்கிய கட்டமாக இன்று 29 கட்ட விசாரணை நடக்க இருக்கிறது.இந்த விசாரணைக்கு ஹென்றி திபேன் மற்றும் 57 நபர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த விசாரணையில் முக்கிய வாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#News4Tamil, ##ThoothukudiPoliceFiring, #CommissionofInquiry, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #HenriTiphagne
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..! People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். விசாரணை ஆணையத்தின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விசாரணை நிறைவடையாததால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி  22-ஆம் தேதி வரை (அதாவது மேலும் ஆறு மாதம்) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கவுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. https://dinasuvadu.com/thoothukudi-shooting-commission-of-inquiry-summons-58-people/

#Thoothukudi, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, #HenriTiphagne, ##ThoothukudiPoliceFiring
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!!! People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!!! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். விசாரணை ஆணையத்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், விசாரணை நிறைவடையாததால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி வரை (அதாவது மேலும் ஆறு மாதம்) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கவுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

#Thoothukudi, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, #HenriTiphagne, #ThoothukudiPolice, #UpdateNews360
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29வது கட்ட விசாரணையை இன்று நடத்துகிறது

#Dinakaran, #HenriTiphagne, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, ##ThoothukudiPoliceFiring
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – 58 பேருக்கு சம்மன் People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – 58 பேருக்கு சம்மன் 23/08/2021 12:00 PM   தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22- ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறை காரணமாக பொது மக்களுக்கு உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன. மேலும், தனியார் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. அவை குறித்து விசாரிப்பதற்காக, சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார். இதனிடையே ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

#JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, ##HenriTiphagne, ##ThoothukudiPoliceFiring
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன்   தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல தரப்பினர் அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இதற்கான, கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதனை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்தது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.

#JusticeArunaJegadeesanCommissionofInquiry, #ThoothukudiPoliceFiring, #CommissionofInquiry, #Thoothukudi, #HenriTiphagne, #Dinakaran
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஆணையம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் - ஹென்றி திபேன் People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஆணையம்  விசாரணையை விரைந்து  முடிக்க வேண்டும் - ஹென்றி திபேன் 

#HenriTiphagne, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #PoliceFiring


Join us for our cause