for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

14 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு... சென்னை உயர்நீதிமன்றம்..! People's Watch in Media Chennai

கடந்த 2018ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி காட்ட கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின்  அடிப்படையிலும், வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.  இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபென் தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினர். இந்த அறிக்கை நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என அறிவுறுத்தினர். பின்னர், கடந்த 2018ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி காட்ட கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது. இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் தெரிவித்தனர். தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.   இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

#AsianetNews, #TamilAsianetNews, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கார்ப்பரேட்களை அரசில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது – ஐகோர்ட் People's Watch in Media Chennai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடிய்ல் மே 22, 2018ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதையடுத்து, மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் சீல் வைத்த கவரில் அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், அதை வெளியிடுவது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இதை சுட்டிக்காட்டி ஹென்றி திபேன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமை செயலாளருக்கும் டிஜிபிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியிருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். அந்த அடிப்படையில், அந்த அறிக்கையின் நகலை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் மனுதாரருக்கும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இந்த அறிக்கையைப் பெற்ற பிறகு தமிழக அரசு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி காட்டக்கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. இது போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக்கூடாது எனவும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் புலனாய்வுப் பிரிவு அறிக்கையையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

#IndianExpress, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 தூத்துக்குடி சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு; தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து People's Watch in Media Chennai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டுநடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13...

#HinduTamil, #TheHinduTamil, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு” சென்னை உயர்நீதிமன்றம் People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ‘ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’ என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின்  அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.  இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபென் தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த அறிக்கையின் நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். பின்னர், கடந்த 2018ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் தெரிவித்தனர். தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்,  இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

#TamilNattunadapu, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, ##HighCourt, #HighCourtOrder, #Corporate, #HenriTiphagne
14 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு - அரசு பரிசீலிக்க உயர் நீதி மன்றம் அறிவுரை People's Watch in Media Chennai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு - அரசு பரிசீலிக்க உயர் நீதி மன்றம் அறிவுரை 

#Dinamani, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 CBI must probe reasons for Thoothukudi firing: HC People's Watch in Media Chennai

The matter should be brought to its logical end as expeditiously as possible’ The Madras High Court on Monday stressed the need for Central Bureau of Investigation (CBI) to find out the circumstances under which the...

##TheHindu, #ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 Drop all cases against anti-Sterlite protestors: Madras HC People's Watch in Media Chennai

The Madras High Court on Monday directed the authorities concerned to drop all the cases registered against the protestors involved in the anti-Sterlite agitation in 2018, in which 13 persons were killed in alleged police firing, and ensure their...

#DTNext, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 Police Firing at Anti-Sterlite Protesters a Scar on Indian Democracy: Madras High Court People's Watch in Media New Delhi

New Delhi: The Madras high court on Monday directed the authorities concerned to drop all the cases registered against the protestors involved in the anti-Sterlite agitation in 2018, in which 13 persons were killed in alleged police firing, and ensure...

#TheWire, #ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து People's Watch in Media Chennai

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின்  அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபென் தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த அறிக்கையின் நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.   தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்,  இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

#Thinaboomi, #ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 Sterlite case police firing ‘scar on democracy’: Madras HC People's Watch in Media Chennai

CHENNAI: Asserting that the 2018 police firing on anti-Sterlite protestors in Tuticorin was a scar on the face of our democracy, the Madras high court said citizens should not be fired at the behest of any corporate house. ...

#TimesofIndia, #TOI, #ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate


Join us for our cause