People's Watch in Media
தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் –உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்! தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்றார். இதையொட்டி அவருக்கு நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் நேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளரும் , மனித உரிமை ஆர்வலருமான ஹென்ரி திபேன் என்பவர், ஜி. வெங்கட்ராமனை பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். ........................................................................
''தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்'' - உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் வழக்கு! - TAMIL NADU DGP டிஜிபி சங்கர் ஜிவால் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் வெங்கட்ராமன் என்ற நபரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சமூக நீதி அரசு 'பொறுப்பு' என்ற புதிய சொல்லை கண்டுபிடித்து இருக்கிறது....
Stubborn for a cause: How a Dalit mother is waging a war to let her son rest in peace Despite the arrest of six persons, a woman in Tamil Nadu relentlessly fights to bring the authorities...
