People's Watch in Media
அருண்குமாரின் சகோதரர், 17 வயது சிறுவன், அவரது தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், மாடசாமியுடன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்கள் ஏடிஎஸ்பி சங்கரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘ஐஜி தலைமையிலான அதிகாரியின் மேற்பார்வையில் விசரணை நடத்த வேண்டும். அப்போதுதான் விசாரணைக்கு சாட்சிகள் ஒத்துழைப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் விசாரணை நேற்று நடைபெறவில்லை.
வழக்குரைஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புகார் அளித்துள்ள அருண்குமார் வெளியூரில் வசித்து வருவதால், விசாரணைக்கு வர இயலவில்லை. நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் எதுவும் அளிக்கவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை வழக்கின் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெறும். நாங்கள் அச்சமின்றி சாட்சி சொல்ல வர முடியும். அதன்பின்னரே நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்போம் என எழுத்துப் பூர்வமாக மனு அளித்துள்ளோம் என்றார்.
Mr.Henri Tiphagne, executive director of People’s Watch, had raised a few questions in his open letter to the IPS Officers’ Association-Tamil Nadu Chapter president Mr.Abhash Kumar -on 6th May 2023. “You have issued a statement dated 04.04.2023 titled Media...
அருண்குமாரின் வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “பல்வீர்சிங் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. குற்றம் சாட்டியவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதிக்கப்பட்டவர் இப்போது பெங்களூரில் இருக்கிறார். அவர் 5-ம் தேதி ஆஜராக 3-ம் தேதி சம்மன் அனுப்புகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி மேல் நடக்கும் குற்றச்சாட்டு குறித்து ஐ.ஜி, அல்லது டிஐஜி நிலை அதிகாரியே விசாரிக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் கைது செய்யப்பட்ட பின்பே உண்மைநிலை வெளிவந்தது. அதேபோலத்தான் இதிலும் பல்வீர் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் ”என்றார்.
The ongoing probe by the CB-CID into the alleged custodial torture by suspended Assistant Superintendent of Police Balveer Singh and others in Ambasamudram police sub-division in the district should be probed or at least monitored by a police...