for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

18 Nov 2021 மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுகூராய்வு People's Watch in Media Pudukottai

இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுகூராய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர். ராஜ்கிரண் (30) எஸ்.சுகந்தன் (30) ஏ. சேவியர் (32) ஆகியோர் அக்.19ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனர். அதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. சுகந்தன், சேவியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அக்.23ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரண் உடல் கடல் வழியாக கொண்டுவரப்பட்டு கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கிரனின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அதனால் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும்  மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3ஆம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் ராஜ்கிரண் மனைவி பிருந்தா உள்ளிட்டோர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பிருந்தா மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மீனவர் ராஜ்கிரணின் உடலைத் தோண்டி எடுத்து மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு தடயவியல்துறை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோர் மறு உடற்கூராய்வை மேற்கொண்டனர். சுமார் இரண்டுமணி நேரத்தில் உடல் மீண்டும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூராய்வு அறிக்கை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

#media
18 Nov 2021 Woman moves Madras High Court alleging husband shot by Sri Lankan Navy People's Watch in Media Madurai

A woman from Pudukkottai district has moved the Madurai Bench of the Madras High Court seeking conduct of re-postmortem on the body of her husband who died after falling into the sea when his boat collided with a Sri...

#media
18 Nov 2021 Re-post mortem of Pudukai fisher done People's Watch in Media Trichy

The body of a fisherman from Pudukkottai was exhumed on Thursday for re-post mortem as per the direction of the Madurai Bench of Madras High Court after the wife of the deceased raised suspicion over the cause of death....

#media
18 Nov 2021 உயிரிழந்த மீனவர் உடல் மறு பிரேதப் பரிசோதனை: நவ.24-ல் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் People's Watch in Media Pudukottai

இலங்கை ரோந்துக் கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை, வரும் 24-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்.ராஜ்கிரண் (30), எஸ்.சுகந்தன் (30), ஏ.சேவியர் (32). இவர்கள் மூவரும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துப் படகு மூலம் மீனவர்கள் படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இதில், மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதோடு மீனவர் ராஜ்கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயர் தப்பிய மீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து பின்னர் விடுவித்தனர். இதையடுத்து, அக்.23-ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரைக் கொலை செய்திருக்கலாம் எனவும், எனவே அவரது உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3-ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம், ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பிருந்தா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வட்டாட்சியர் முன்னிலையில் மறு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில், மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட ராஜ்கிரணின் சடலத்தைத் தடயவியல் துறை மருத்துவர்கள் தமிழ் மணி, சரவணன் ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், கூடுதல் சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான அறிக்கை வரும் 24-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

#media
17 Nov 2021 மரணத்தில் சந்தேகம்.. மீனவர் ராஜ்கிரண் உடலை மறு கூராய்வு செய்ய கோர்ட் உத்தரவு..! People's Watch in Media Madurai

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் நடுக்கடலில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார். இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில், இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. என்னிடமும், உறவினர்களிடமும் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தது. எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவிக்கையில், ‘மீனவர் ராஜ்கிரண் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அதனை எளிதாக விட்டுவிட இயலாது. உயிரிழந்த மீனவர் மனைவியின் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை. இறந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்வதில் என்ன பிரச்சனை..? தாசில்தார் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் நவம்பர் 18-ம் தேதி மீனவரின் உடலை தோண்டி எடுத்து கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தடய அறிவியல் துறை மருத்துவர் தமிழ்மணி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரவணன் ஆகியோர் மீனவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும். அதன் அறிக்கையை நவம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்யவும். உடற்கூராய்வின் போது, மனுதாரர் தரப்பில் ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் உடனிருக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

#SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #Re-postmortem, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடலில் பலியான மீனவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் மதுரை ஹைகோர்ட் உத்தரவு People's Watch in Media Pudukottai

இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடலில் பலியான மீனவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் மதுரை ஹைகோர்ட் உத்தரவு

#DailyThanthi, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 இலங்கை கப்பல் இடித்ததில் பலியான மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை People's Watch in Media Pudukottai

இலங்கை கப்பல் இடித்ததில் பலியான மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை  சுடப்பட்டு இறந்தாரா? அறிக்கையளிக்க உத்தரவு

#Dinakaran, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 இலங்கை க் கடற்படை கப்பல் மோ தி உயிரி ழந்த மீனவரி ன் உடலை மறுபிரே தப் பரி சோ தனை செ ய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai

இலங்கை க் கடற்படை கப்பல் மோ தி உயிரி ழந்த மீனவரி ன் உடலை மறுபிரே தப் பரி சோ தனை செ ய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு

#Dinamani, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 Re-postmortem ordered on fisher's body allegedly killed by Lankan Navy People's Watch in Media Madurai

MADURAI: The Madurai Bench of Madras High Court on Tuesday ordered re-postmortem on the body of Rajkiran (28), a fisherman from Pudukkottai, who died last month after his boat was allegedly hit by a Sri Lankan vessel. Hearing a...

#NewIndianExpress, #NIE, #SriLankanNavy, #PostMortem, #Re-postmortem, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection


Join us for our cause