People's Watch in Media
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஆணையம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் - ஹென்றி திபேன்
தூததுக்குடியில் ஒருநபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை தொடங்கியது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. பதிவு: ஆகஸ்ட் 23, 2021 18:23 PM தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு உயிரழப்பு, காயங்கள் ஏற்பட்டன. மேலும் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. அவை குறித்து விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில் தனது இடைக்கால அறிக்கையை அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தார். ஆணையத்தின் 29ஆவது கட்ட விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2018 மே 22ம் தேதி போராட்டக்காரர்களை தமிழக காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். மேலும் மக்கள் மீது வன்முறையை செலுத்தினர்.இந்த சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 102 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும் இறந்த 13 நபர்களின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ அரசின் மீதும் காவல்துறை மீதும் வழக்கு தொடுத்தனர். இது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.இவரது தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் சமீபத்தில் தனது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தார். இந்த விசாரணை ஆணையம் பல்வேறு தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 28 கட்டங்கள் விசாரணை நடந்து முடிந்துள்ளது.இந்த விசாரணையின் முக்கிய கட்டமாக இன்று 29 கட்ட விசாரணை நடக்க இருக்கிறது.இந்த விசாரணைக்கு ஹென்றி திபேன் மற்றும் 57 நபர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த விசாரணையில் முக்கிய வாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். விசாரணை ஆணையத்தின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விசாரணை நிறைவடையாததால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி வரை (அதாவது மேலும் ஆறு மாதம்) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கவுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. https://dinasuvadu.com/thoothukudi-shooting-commission-of-inquiry-summons-58-people/
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!!! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். விசாரணை ஆணையத்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், விசாரணை நிறைவடையாததால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி வரை (அதாவது மேலும் ஆறு மாதம்) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கவுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29வது கட்ட விசாரணையை இன்று நடத்துகிறது
Aruna commission records statements of 813 witnesses
பண்பாட்டு மாற்றம் தேவை - சித்திரவதை நிலவுவதை ஏற்க இயலாது - கனிமொழி காட்டம்
Eminent lawyers, journalists and human rights defenders on Monday evening paid tributes to Jesuit priest and activist Stan Swamy, who had once told his colleagues that if "working for the tribals, the marginalised was a crime," he was ready...