for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

14 Dec 2021 ஆந்திராவில் 2 தமிழக தொழிலாளர்கள் மர்ம மரணம்.. நடந்தது என்ன?.. மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை! People's Watch in Media Dharmapuri

தருமபுரி: ஆந்திராவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு...

#OneIndiaTamil, #FactFinding, #APForest, #AP, #Tribals, #Torture, #Labourers, #LabourersKilled, #FactFindingReport, #HenriTiphagne
14 Dec 2021 NGO alleges torture and killing of tribal labourers from TN in AP forests People's Watch in Media Dharmapuri

ABOUT 50 poor labourers belonging to the Scheduled Tribes (ST) category from Tamil Nadu were allegedly lured into the forests in Kadapa district of Andhra Pradesh in the last week of November by red sandalwood smugglers. Subsequently,  they were captured,...

#TheLeafLet, #AP, #APForest, #FactFinding, #RedSandal, #Labourers, #LabourersKilled, #HenriTiphagne, #Dharmapuri
14 Dec 2021 ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? வழக்கறிஞர் ஹென்றி திபேன் #Redpix People's Watch in Media Chennai

ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? போஸ்ட்மார்ட்டத்தில் தில்லுமுல்லு - வழக்கறிஞர் ஹென்றி திபேன் பரபரப்பு பேட்டி Redpix யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி Video Courtesy: #Redpix To watch full video: https://youtu.be/YFHkRD6wGe0...

#Ramanathapuram, #CustodialDeath, #Redpix, #CustodialTorture, #PoliceTorture, #Manikandan, #YouTube, #HenriTiphagne
14 Dec 2021 Report of the fact-finding team on the death of two Tamil tribal workers in Andhra Pradesh People's Watch in Media Dharmapuri

Two Tamil Nadu labourers were killed in the custody of Andhra Pradesh forest officials. The joint conspiracy of Andhra Pradesh forest officials and police distract the case. Why is the Tamil Nadu Government keeping silent?, asks People’s Watch. A...

#CounterView, #RedSandal, #APForest, #AP, #FactFinding, #Labourers, #LabourersKilled, #FactFindingReport, #Torture
13 Dec 2021 ஆந்திராவில் இரு தமிழர்கள் மர்ம மரணம் - நிவாரணம் வழங்க வலியுறுத்தல் People's Watch in Media Dharmapuri

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலமாக அடக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திராவிற்கு சென்று விசாரணை செய்து அறிக்கையைத் தயார் செய்துள்ளனர். இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஆந்திர மாநிலத்தில் வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தருமபுரி மாவட்டம் சித்தேரியை சார்ந்தவர்கள். முதலமைச்சர் உதவி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து இருளர் இன மக்களுக்குப் பல உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். ......................................

#ETV, ##EtvBharath, #AP, #Forest, #Dharmapuri, #FactFinding, #FactFindingReport, #HenriTiphagne, #APForest, #Labourers, #LabourersKilled
13 Dec 2021 செம்மரம் வெட்ட செல்வோரை தடுக்க : அரசுக்கு மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் : People's Watch in Media Dharmapuri

இதுதொடர்பாக தருமபுரியில் அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் சித்தேரியில் உள்ள எஸ்டி மலைவாழ் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. இதனால், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும், ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில வனத்துறையால் கொல்லப்பட்டனர். தற்போது, இதே போன்ற நிகழ்வில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் மற்றும் எஸ்பி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. சித்தேரியில் உள்ள மலைக் கிராம மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்மரக்கட்டைகளை வெட்ட செல்லும் நிலையை தடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ளவர்களை கொலை செய்த, ஆந்திர வனத்துறையினர் மீது வழக்கு தொடுப்பதுடன், ஆந்திரா சிறையில் உள்ளவர்களை, விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

#TamilHindu, #HinduTamil, #APForest, #AP, #HenriTiphagne, #FactFinding, #FactFindingReport, #Labourers, #LabourersKilling
13 Dec 2021 Fact-finding committee seeks inquiry into death of tribals People's Watch in Media Salem

A People’s Watch fact-finding team, which examined the recent death of two tribals from Sitheri in Dharmapuri in Andhra Pradesh, has urged the State government to form an inquiry committee into the issue. Two tribals Raman and Balakrishnan...

#TheHindu, #RedSandal, #HenriTiphagne, #PressMeet, #AP, #APForest, #Labourers, #LabourersKilled
13 Dec 2021 மலைவாழ் பழங்குடியின கூலித்தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் People's Watch in Media Dharmapuri

மலைவாழ் பழங்குடியின கூலித்தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் 

#RedSandal, #Tribals, #CustodialDeath, #PoliceAtrocity, #Labourers, #LabourersKilled, #Dinakaran
13 Dec 2021 ஆந்திர வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் - மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் தமிழக அரசுக்கு  கோரிக்கை People's Watch in Media Dharmapuri

ஆந்திர வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் - மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் தமிழக அரசுக்கு  கோரிக்கை

#DailyThanthi, #RedSandal, #Tribal, #Torture, #HenriTiphagne, #PressMeet, #Dharmapuri
13 Dec 2021 ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட செல்வதை தடுக்க வேண்டும்’ People's Watch in Media Dharmapuri

ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி டிபேன் வலியுறுத்தினாா். இதுகுறித்துத் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் இடைத்தரகா்களின் ஆசை வாா்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆந்திர வனத் துறையால் கொல்லப்பட்டனா். இதுகுறித்துத் தருமபுரி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிா்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளாது ஏன் என தெரியவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இருளா் இன மக்களின் துயரத்தை அறிந்து அவா்களுக்குத் தேவையான நலத் திட்ட உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதேபோல் தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதர மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்து செம்மரம் வெட்டுவதற்கு செல்லும் நிலையைத் தடுக்க வேண்டும். அண்மையில் சித்தேரியைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆந்திர மாநில சிறையில் உள்ளவா்களை, ஜாமினில் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

#Dinamani, #HenriTiphagne, #Tribal, #AP, #RedSandal, #APForest, #Dharmapuri, #LabourersKilling


Join us for our cause