இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே ஓர் அசாதாரண சூழல் நிலவியது. அதேபோன்றதொரு பதற்றமான மனநிலைக்குத் தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
