for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தருமபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஜி.லெனின், சிறீதர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி. செந்தில்ராஜா தலைமை வகித்தார். மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே. ஸ்டாலின், தோழி கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.சங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் குமார், அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் முனி. ஆறுமுகம், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. தவமணி, தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் கமலக்கண்ணன்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ரங்கநாயகி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் வே. விசுவநாதன் ஆகியோர் பேசினர்.




Expressing its concern over the arrest and detention of May 17 Movement coordinator Thirumurugan Gandhi and 3 others by the state government last year, the UN Working Group (UNWG) on Arbitrary Detention has held that there was no ‘legal basis justifying the deprivation of liberty’ of the quartet.

Chennai: 

Significantly, India did not respond to the communications from the UNWG, which rendered its opinion in November 2017 and the report of the same was recently made public. 




"மனித உரிமைகளைப் பறிக்கிறது இந்தியாவின் குண்டர் சட்டம்!" திருமுருகன் காந்தி விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின்போது உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்காக, சென்னை மெரினாவில் கடந்த வருடம், மே 17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டபோது, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.





Join us for our cause