for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

31.10.2022 மக்கள் கண்காணிப்பகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு - கவியரசு மற்றும் கல்லுமண்டையன் என்ற முருகன் ஆகியோர் கடந்த 16.02.2010 அன்று அப்போதைய காவல் உதவி ஆணையாளர் திரு.வெள்ளதுரையால் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பான தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வழக்கில் ஆணையம் வழங்கியுள்ள 21.10.2022 தேதியிட்ட தீர்ப்பு தொடர்பாக.... தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திருமதி.குருவம்மாள் ஆஜராகி இவ்வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் திரு.சின்னராசா அவர்கள் தலைமையிலான வழக்கறிஞர்கள் திரு.க.சு.பாண்டியராஜன், திரு.சதீஷ் ராஜ்குமார், திரு.நாகேந்திரன், திரு. முத்துகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு மக்கள் கண்காணிப்பகம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இதுவரை திரு.வெள்ளத்துரை அவர்கள் செய்த என்கவுண்டர் கொலைகள் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.





Join us for our cause