for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தங்கள் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கொடுப்பதாக மிரட்டியதாக பலியான விக்னேசின் சகோதரர் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.

விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது சகோதரர் வினோத் உடற்கூராய்வுக்குப் பிறகும் கூட விக்னேசின் உடலைப் பார்க்க குடும்பத்தினரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் புகார் கொடுக்காமல் இருக்க எனக்கு ரூ ஒரு லட்சம் தருவதாக காவலர்கள் கூறினார்கள். எனது சகோதரர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. உடற்கூராய்வுக்குப்பின் உடலைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார் விக்னேசின் சகோதரர் வினோத்.

அது மட்டுமல்லாமல் எங்கள் வீட்டின் உரிமையாளரிடம் காவலர்கள் மிரட்டி உடனடியாக எங்களை வீட்டை காலி செய்யச் சொல்லுமாறும் கூறியுள்ளனர் என்றும் வினோத் குற்றம் சாட்டியுள்ளார்.

Full Media Report



Join us for our cause