தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் பதிவான அவமதிப்பு வழக்கு! அடுத்து என்ன நடக்கும்?
தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது நியமனத்திற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார். மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்த கூடாது என எச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருந்தது.
……………………………………………………..
ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு
சமூக ஆர்வலர் ஹென்றி திபேன், வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், மாநில டிஜிபி நியமனங்களில் "பொறுப்பு" என்ற இடைக்காலப் பதவியை பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவைக் கடந்து, தமிழக அரசு சட்டத்தை மீறும் வகையில் இந்த நியமனத்தை செய்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
