for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

இலங்கைக் கடற்படை கப்பல் மோதி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவா் உடலில் காயங்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை ச் சோ்ந்த பிருந்தா தாக்கல் செய்த மனு: கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து எனது கணவா் ராஜ்கிரண், சுகந்தன் மற்றும் சேவியா் ஆகிய 3 பேரும் அக்டோபா் 19-ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அங்கு வந்த இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில், மீனவா்களின் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. அப்போது இலங்கைக் கடற்படையினா், மீனவா்கள் சுகந்தன் மற்றும் சேவியா் ஆகியோரை மீட்டனா். இதில், எனது கணவா் ராஜ்கிரண் 2 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டாா். ஆனால், அவரது சடலத்தை பெட்டியில் எடுத்து வந்த இந்தியக் கடற்படையினா், என்னிடமும், உறவினா்களிடமும் முழுமையாகக் காட்டாமல் அடக்கம் செய்துவிட்டனா். இதனால், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனது கணவரின் சடலம் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரது முகத்திலும், உடலிலும் காயங்கள் இருந்தன.

எனவே, எனது கணவா் இறப்பு தொடா்பாக, தமிழக போலீஸாாா் வழக்குப் பதிவு செய்யவும், அவரது சடலத்தை மறுபிரேதப் பரிசோதனை செய்து உண்மையைக் கண்டறியவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். ஏற்கெனவே வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவா் ராஜ்கிரணின் சடலத்தை , மறுபிரேதப் பரிசோதனை செய்யவும், அவா் சுடப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்தும் வகையில், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மீனவா் ராஜ்கிரண் சடலம் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உடலில் எந்தவித காயமும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மனுதாரா் தரப்பில், மறுபிரேதப் பரிசோதனையில் எனது கணவரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால் இலங்கையில் எனது கணவரின் சடலம் பிரேதப் பிரிசோதனை செய்யப்பட்ட பிறகு, தைக்கப்படாமலும், உடைகள் அணிவிக்கப்படாமலும் அப்படியே பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும், குறிப்பாக இலங்கையில் இருந்து அனுப்பப்படும் மீனவா்கவா்ளின் உடலுக்கான மாண்பு வழங்கப்படுவதில்லை. இது தொடா்பாக உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மத்திய அரசை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சோ்ப்தாகக் குறிப்பிட்டு, விசாரணையை டிசம்பா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

Full Media Report



Join us for our cause