2026ஆம் ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் அறிவிப்பு!
தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகநீதி, அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
