காவல் சித்திரவதைக்கு எதிராக ஏன் ஒரு விரிவான சட்டம்அவசியம்?
கடந்த மாதம் காவல் சித்திரவதையால் கொல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றிய 28 வயதுடைய அஜித்குமாரின் மரணம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கொடூரமான சம்பவம், காவல்சித்தரவதையைத் தடுக்கும் வகையில் விரிவான சட்டம் உடனடித்தேவை என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதைநியாயப்படுத்த பல்வேறு முக்கியகாரணங்கள் இருக்கின்றன.
