பெருகும் குற்றங்கள்... சறுக்கும் காவல்துறை...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
"காவல்துறை யாருக்குமே பதில் சொல்ல அவசியமில்லாத சூழல் இங்கே உருவாகிவிட்டது. முதல்வரின் பொறுப்பில் இருக்கிறது காவல்துறை. இந்த நான்காண்டுகளில் எத்தனையோ நிறுவனங்களில் அவர் ஆய்வு செய்திருக்கிறார். காவல் துறையில் ஆய்வு செய்திருக்கிறாரா..?" என்று கேள்வியெழுப்புகிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஹென்றி டி.பேன்.
