விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற நாளின் காவல் நிலைய சி.சிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை அறிக்கையை வழங்கக் கோரிய மனுவில், விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவருமான ஹென்றி திபேன் அவர்கள் பல்வேறு கேள்விகளை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களை நோக்கி வைக்கிறார். @MadrasReview