for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தமிழர்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் மதவாத அமைப்புகள் வால் நறுக்கப்படும்: திருமாவளவன் எச்சரிக்கை

மதுரை: மதுரையில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மதகலவரத்தை தூண்டும் முருக பக்தர் மாநாட்டை கண்டித்து நேற்று மனித சங்கிலி நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்புறம் துவங்கி தமிழ் சங்கம் வரையிலும் நடந்த மனிதச்சங்கிலியின் போது கைகளில் பேனர்களுடன், ‘அரசியலில் மதத்தை கலக்காதே’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், திக, விசிக, தமிழ்புலிகள், ஆதி தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பேசினர். இதில், நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி பிரகடனம் வெளியிட்டு திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத வெறுப்பை மக்களிடம் விதைத்து வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்துள்ளனர்.

Full Media Report



Join us for our cause