திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன்
`திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அனைத்து பிரச்னைகளுக்கும் விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் விசிக-வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.' – திருமாவளவன்
"திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
.....................................................
மதுரையில் மார்ச் 11-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்த தென் மாவட்டத்திலுள்ள ஜனநாயக சக்திகள் அனுமதி கேட்டதற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பேரணி எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல, அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளக்கூடியது. எனவே மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்.
....................................................
திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அனைத்து பிரச்னைகளுக்கும் விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் விசிக-வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம் அதைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பும் உள்ளது, விசிக எந்த இடத்திலும் பலவீனமடையவில்லை" என்றார்.
