for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி 2020 ஜூலை 14; காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல்துறையினரால் கொடுரமாக தாக்கப்பட்ட காயல்பட்டிணம் ஹபீப் முகமது  புகார் கொடுக்க கூடாது என தொடர்ந்து  மிரட்டப்பட்டு வந்தார்.

வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் திருச்செந்தூர் காவல் துனை கண்காணிப்பாளர் அவர்கள் விசாரனை நடத்தி முடித்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் ஹபீப் முகமதுவை தாக்கிய ஆறுமுகநேரி காவல் நிலைய  காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. 





Join us for our cause