for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

9 Jan 2022 மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை எதற்காக? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! People's Watch in Media Chennai

சென்னை: மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மக்கள் கண்காணிப்பகம் தமிழகத்தின் பெரும் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை நடைபெறும் மனித உரிமை மீறல்களை...

#MMK, #TMMK, #Jawahirullah, #CBI, #CPSC, #PeoplesWatch
9 Jan 2022 Executive Director Henri Tiphagne's Statement on CBI's FIR against People's Watch / CPSC People's Watch in Media Madurai

Executive Director Henri Tiphagne's Statement on CBI's FIR against People's Watch / CPSC    

#CBI, #FIR, #CPSC, #PeoplesWatch, #Search, #MHA, #MinistryofHomeAffairs
9 Jan 2022 வெளிநாட்டு நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு…மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு People's Watch in Media Chennai

CPSC அறக்கட்டளை மற்றும் ‘People’s Watch’ தொண்டு நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் ‘People’s Watch’...

#IndianExpress, #TamilIndianExpress, #CBI, #CPSC, #PeoplesWatch
9 Jan 2022 CPSC/மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு-நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் விளக்கம் People's Watch in Media Madurai

CPSC/மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு-நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் விளக்கம்   CPSC / மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் சோதனை செய்து சென்றது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் அவர்களின் விளக்கம்

#CBI, #FCRA, #FIR, #PeoplesWatch, #Search, #CPSC
9 Jan 2022 CBI registers case against CPSC; NGO alleges ‘witch-hunt’ People's Watch in Media Chennai

The complaint also alleged that the association used foreign contributions for a purpose other than “for which it was received” The Central Bureau of Investigation (CBI) has registered a case against Madurai-based Centre for Promotion of Social Concerns...

#DeccanHerald, #CBI, #CPSC, #PeoplesWatch
9 Jan 2022 CBI books CPSC, People’s Watch over foreign funds People's Watch in Media Madurai

The Central Bureau of Investigation (CBI) has registered a case against the Centre for Promotion of Social Concerns (CPSC) and its programming unit People’s Watch on the charges of misuse of foreign funds based on the Union Home ministry’s...

#DTNext, #CBI, #HenriTiphagne, #CPSC, #PeoplesWatch
8 Jan 2022 அனுமதி பெறாமல் வெளிநாடுகளிலிலிருந்து நன்கொடை: மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு People's Watch in Media Chennai

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையை  தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ்  'People's Watch' என்ற தொண்டு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடை மற்றும் பல்வேறு வகையில் நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைக் கொண்டு குழந்தைகள், முதியவர்கள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கு காப்பகங்கள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்குண்டான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், CPSC அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் கோடிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் நன்கொடை பெற்றதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதையும், முறையான அனுமதி பெறாததையும் உறுதி செய்து சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரைத்தது. அதனடிப்படையில் சி.பி.ஐ இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டதில் CPSC அறக்கட்டளை மற்றும் அதன் கீழ் இயங்கி வரும்  'People's Watch' தொண்டு நறுவனம் கடந்த 2005-2006, 2010-2011 மற்றும் 2012-2013 காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பலமுறை உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கோடிக் கணக்கில் பணம் நன்கொடை பெற்றுள்ளதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் CPSC அறக்கட்டளை மற்றும் 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் முறைகேடு செய்துள்ள பண மதிப்பு குறித்து விசாரணை முடிவுக்குப்பின் தெரிவிக்கப்படும் எனவும் சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#PuthiyaThalaimurai, #PT, #CBI, #CPSC, #PeoplesWatch, #HenriTiphagne
8 Jan 2022 மதுரை தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. சிபிஐ அதிரடி ஆக்ஷன். என்ன காரணம் தெரியுமா People's Watch in Media Chennai

மதுரை: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது எட்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற வேண்டும் என்றால் அவை மத்திய அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இதற்கான உரிமத்தைப்...

#OneTamilNews, #CBI, #CPSC, #PeoplesWatch, #HenriTiphagne
7 Jan 2022 வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் இருவர் விடுதலை குறித்த கூட்டறிக்கை People's Watch in Media Chennai

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கோயம்புத்தூர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் திரு.மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து திரு. ஆண்டியப்பன், திரு.பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர். இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும். அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்கிற அரசின் கண்ணோட்டத்திற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து அவர்கள் தண்டனை பெற்ற வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. ................... ஒருங்கிணைப்பு மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மக்கள் கண்காணிப்பகம் (People's Watch) தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சோகோ அறக்கட்டளை

#PrematureRelease, #Jail, #STF, #DemandtoCM


Join us for our cause