for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Press Releases

28 Nov 2023 கோவை, துடியலூர், அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது வெறுப்புணர்வோடு நடந்து தாக்குதல் நடத்திய பயிற்சி ஆசிரியையை விசாரணைக்கு உட்படுத்துக. பயிற்சி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர Press Releases

கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுத்து நிறுத்தப்படும் சூழல் நமது சமூகத்திற்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகள் உரிமை மீறலாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை அபிநயா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் வகுப்பு ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியின் மீது நடந்த உரிமை மீறல் சம்பவம் குறித்து மாவட்ட அளவில் உள்ள குழந்தைகள் நலக்குழு (CWC) மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (DCPO) ஆகியவற்றில் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று கல்வியினை தொடர்வதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

#media
27 Nov 2023 போக்ஸோ (POCSO) வழக்கில் பாதிப்பிற்குள்ளான சிறுமியை கை விலங்கிட்டு பெண் காவலர் அழைத்துச் சென்ற சம்பவத்தினை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து (Suo-Moto) விசாரிக்கக் கோரி மக்கள் கண்காணி Press Releases

கடந்த 21.11.2023 அன்று மாநிலம் முழுவதும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் செய்தியில், 07.11.2023 அன்று பெண் காவலர் ஒருவர், போக்ஸோ (POCSO Act) வழக்கில் பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியிடம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறுவதற்காக, ஊட்டியில் உள்ள அன்னை சத்யா இல்லத்தில் இருந்து கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியுடன் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய பெண் காவலர் சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, கிட்டத்தட்ட 400 மீட்டர் நடந்தவாறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். நீதிமன்ற வாசலில் மட்டும் கை விலங்கை அகற்றி, 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றவுடன், மீண்டும் அச்சிறுமிக்கு கை விலங்கிட்டு, பொது சாலையில் பேருந்து நிலையம் வரை நடக்க வைத்தது என்பது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கிறது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன் வந்து (Suo-Moto)  இவ்வழக்கினை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியதோடு, மனித உரிமைகள் திருத்தச் சட்டம், 2019 பிரிவு 12 (A) இன் கீழ் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் தாமாக முன் வந்து (Suo-Moto)  விசாரணைக்கு எடுக்குமாறு மக்கள் கண்காணிப்பகம் 25.11.2023 அன்று மனு அனுப்பிள்ளது.  

#media
25 Nov 2023 People’s Watch appeal to the Hon’ble Chief Justice of Madras High Court and Chairperson of Tamil Nadu Human Rights Commission to take suo-moto action in the case of POCSO victim hand cuffed by women police Press Releases

People’s Watch sent representation to seeking suo-moto action to Chief Justice of Madras High Court and urged Tamil Nadu State Human Rights Commission to take suo-moto cognizance under section 12 (a) of the Protection of Human Rights (Amendment) Act,...

#media
6 May 2023 இந்திய காவல் பணி அதிகாாிகள் சங்கத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் திறந்த மடல் Press Releases

தாங்கள், கடந்த 04.04.2023 அன்று "திரு.பல்வீர்சிங் I.P.S., என்பவருக்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் (Media Trial) நடக்கின்றது" என்ற தலைப்பில், பொதுநல நோக்குடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அறிக்கையை இன்னாருக்குத் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே தாங்கள் அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாகக் கொண்டு, தற்போது அந்த உரிமையோடு, தாங்கள் எப்படி வெளிப்படையாக திரு. பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் பகிர்ந்தீர்களோ! அதே போல் நாங்களும் திரு.பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கின்றோம். எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையானது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும். தமிழ்நாட்டில் இவ்வாறு காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்சனைகள் வெளிப்பட்டு வரும் போது அவை தொடர்பாக "காவல்துறை அதிகாரிகளின் சங்கம்" என்ற பெயரில், யாரும் அதில் தலையிட்டு கருத்து சொன்னதில்லை. எனவே முதன்முறையாக, அதுவும் காவல்துறையின் உயர்கல்வித் தகுதியான I.P.S தகுதி பெற்ற அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படி ஒரு அறிக்கை வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அந்த அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.

#media
6 May 2023 People’s Watch open letter to IPS officers’ Association, Tamil Nadu Chapter Press Releases

You have issued a statement dated 04.04.2023 titled Media trial regarding an allegation of Custodial Violence against Mr. Balveer Singh, IPS, due to public interest. You addressed the statement to “Dear All” without specifying any name. So, we have...

#media
7 Apr 2023 Impunity rules high in Tamil Nadu to protect notorious IPS officer for his acts of gruesome torture Press Releases

People’s Watch calls upon the conscience of the Hon’ble Judges of the Madras High Court to step in, as it did in June 2020 [Sattangulam] by suo motto taking the case of Ambasamudram and demonstrating that the judiciary will...

#media
4 Apr 2023 People’s Watch’s open response to the statement of the Tamil Nadu IPS officers’ Association President, Mr. Abhash Kumar IPS DGP Press Releases

1) Firstly, as far as the Collector and SP are concerned, why was there no immediate inquiry by the District Police Complaints Authority in which both of them are members? Why? 2) The PSO enquiry now undertaken does...

#media
27 Mar 2023 IPS officers and Judicial Magistrates to also be closely monitored: in cases of violations of police torture despite Sathankulam. Press Releases Madurai

People’s Watch strongly condemns the barbarous, vicious and treacherous acts of torture and inhuman and degrading treatment undertaken by Mr. Balveer Singh IPS, the Additional Superintendent of Police, Ambasamudram of Tirunelveli District, Tamil Nadu as is just now revealed...

##CustodialDeath, ##ASP, ##BalVeerSingh, ##Ambasamudram, ##PoliceTorture, ##CustodialViolence
14 Jan 2023 பத்திரிகைச் செய்தி - செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்க எடுத்த தமிழக முதல்வரை மக்கள் கண்காணிமக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது Press Releases Madurai

செங்கல்பட்டு அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்க எடுத்த தமிழக முதல்வரை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது. மேலும் கொலையை மறைக்க முயன்ற மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருடன் கூட்டாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.   செங்கல்பட்டு மாவட்டம்,...

#ObservationHome, #Juvenile, #Torture, #Murder, #CustodialTorture, #ChildRights, #ViolenceAgainstChildren
11 Jan 2023 செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல்ஸ்ரீ (17 வயது) சிறுவன் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிப்பதோடு, மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் உடனடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோருகிறோம் Press Releases Madurai

கோகுல்ஸ்ரீ என்கிற 17 வயதான சிறுவன் 29.12.2022 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் தாம்பரம் இரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான். 30.12.2022 அன்று சிறுவனின் தாயார் பிரியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் தனது மகனை பார்த்து சென்ற பின், சிறுவன் கோகுல்ஸ்ரீ அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் 31.12.2022 அன்று சிறுவன் கோகுல்ஸ்ரீ இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 01.01.2023 அன்று தாயார் தனது மகன் கோகுல்ஸ்ரீ உடலை பார்த்து, உடலில் ஏற்பட்டுள்ள கொடுங்-காயங்களை உடன் இருந்த மாஜிஸ்ட்ரேட்டிடமும், மருத்துவர்களிடமும் கூறியுள்ளார். 17 வயதான சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு முன் பகுதியிலும், பின் பகுதியிலும் காயங்கள் இருந்து, இடது பக்கம் கண்ணின் நெற்றியிலிருந்து வலதுபக்கம் கண்ணின் கீழ் கன்னம்வரை தடியால் அடிக்கப்பட்ட தடமும், கீழ் உதடு இரண்டாக பிளவுபட்ட நிலையிலும் கடும் சித்திரவதைக்கு ஆளாகி 176 (1) (A) பதிவு செய்து புலன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இது போன்ற சித்திரவதைகள் நடந்து கொண்டே உள்ளது. இப்போது அந்த கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளை பார்வையிட்டு, சட்டைகளை கழற்றிப் பார்த்தால் அவர்களுக்கும் காயங்கள் இருப்பது தெரியும். ஆகவே இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர், தலைமை வார்டன், உதவி வார்டன், தலைமைக் காவலர் மோகன், இரவு காவலர்கள் ஹானஸ்ட்ராஸ், சரண்ராஜ், விஜயகுமார், சின்னமுத்து, செவிலியர் நந்தகுமார், கோகுல்ஸ்ரீ தாயாரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தவர்களான அங்கு பணி புரியும் சமையலர்கள் சரஸ்வதி, சாந்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு-DPCO) சிவக்குமார், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளான மற்ற சிறார்களை மிரட்டுவது, மறைப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றார். அவரோடு சேர்ந்து சமூக பாதுகாப்புத் இயக்குநர் திருமதி. வளர்மதி அவர்களும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு- DPCO) அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆகவே பொறுப்பு DPCO சிவக்குமார் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்யும் வகையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தை நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் பாதிப்புகளை பதிவு செய்து, அதற்கு என்ன காரணம் என்று விசாரணை செய்யவேண்டும். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களாலும் சிறார்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட போது 4 சிறார்களையும் சேர்த்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களும் கொடுங்காயங்களோடு உள்ளனர். அச்சிறார்களின் காயங்கள் ஆறுவதற்கு முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒரு மருத்துவக்கு குழுவுடன் எந்த தாமதமுமின்றி அங்கு சென்று ஆய்வு செய்யவும்கோருகிறோம். கொல்லப்பட்ட சிறுவனின் தாயையும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு- DPCO) சிவக்குமார் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவரின் மிரட்டலை எவ்விதத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எவ்விதத்திலும் அனுமதிக்காது பாதிப்பு ஏற்படுத்திய உறுதுணையாக செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு. கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் கோருகிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒரு சுதந்திரமாக செயல்படும் வகையில் தனி குழு ஒன்றை நியமனம் செய்து,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறுவர் கூர்நோக்கு இல்லங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடவும் கோருகிறோம்.    ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

##ObservationHome, ##DCPO, ##Torture, ##ChildRights, ##ViolenceAgainstChildren


Join us for our cause