Media

இலங்கைக் கடற்படை கப்பல் மோதி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவா் உடலில் காயங்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை ச் சோ்ந்த பிருந்தா தாக்கல் செய்த மனு: கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து எனது கணவா் ராஜ்கிரண், சுகந்தன் மற்றும் சேவியா் ஆகிய 3 பேரும் அக்டோபா் 19-ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அங்கு வந்த இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில், மீனவா்களின் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. அப்போது இலங்கைக் கடற்படையினா், மீனவா்கள் சுகந்தன் மற்றும் சேவியா் ஆகியோரை மீட்டனா். இதில், எனது கணவா் ராஜ்கிரண் 2 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டாா். ஆனால், அவரது சடலத்தை பெட்டியில் எடுத்து வந்த இந்தியக் கடற்படையினா், என்னிடமும், உறவினா்களிடமும் முழுமையாகக் காட்டாமல் அடக்கம் செய்துவிட்டனா். இதனால், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனது கணவரின் சடலம் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரது முகத்திலும், உடலிலும் காயங்கள் இருந்தன. எனவே, எனது கணவா் இறப்பு தொடா்பாக, தமிழக போலீஸாாா் வழக்குப் பதிவு செய்யவும், அவரது சடலத்தை மறுபிரேதப் பரிசோதனை செய்து உண்மையைக் கண்டறியவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். ஏற்கெனவே வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவா் ராஜ்கிரணின் சடலத்தை , மறுபிரேதப் பரிசோதனை செய்யவும், அவா் சுடப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்தும் வகையில், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது. இந்த மனு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மீனவா் ராஜ்கிரண் சடலம் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உடலில் எந்தவித காயமும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மனுதாரா் தரப்பில், மறுபிரேதப் பரிசோதனையில் எனது கணவரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால் இலங்கையில் எனது கணவரின் சடலம் பிரேதப் பிரிசோதனை செய்யப்பட்ட பிறகு, தைக்கப்படாமலும், உடைகள் அணிவிக்கப்படாமலும் அப்படியே பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும், குறிப்பாக இலங்கையில் இருந்து அனுப்பப்படும் மீனவா்கவா்ளின் உடலுக்கான மாண்பு வழங்கப்படுவதில்லை. இது தொடா்பாக உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மத்திய அரசை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சோ்ப்தாகக் குறிப்பிட்டு, விசாரணையை டிசம்பா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

He referred to a report submitted by an independent forensic expert who was present during the re-postmortem conducted on Rajkiran’s body last week. MADURAI: The Madurai Bench of Madras High Court on Friday suo motu impleaded the Ministry...

இலங்கை கடற்பகுதியில் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் உடலை உடைகள் அணிவிக்காமல் இந்தியாவுக்கு அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ராஜ்கிரண்மீனவர். சுகந்தன், சேவியர் ஆகியோருடன் அக்டோபர் 19-ல் விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டமீன்பிடித்ததாக கூறி தங்களது ரோந்து கப்பல் மூலம் விசைப்படகில் மோதியுள்ளனர். இதனால் விசைப்படகு கடலில் மூழ்கியது. என் கணவர் கடலில் மூழ்கி விட்டார். சுகந்தன், சேவியர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 நாட்களுக்கு பிறகு என் கணவரின் உடல் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. கணவர் உடலில் காயங்கள் இருந்தன. அவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம். எனவே கணவர் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், மனுதாரரின் கணவரின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டதில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடல் தைக்கப்படாமல், உடைகள் அணிவிக்கப்படாமல் அப்படியே பெட்டியில் வைத்துத் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனி த உடலுக்கான மதிப்பை மீறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இலங்கையில் இருந்து உயிரிழந்த மீனவர்களின் உடல்களை அனுப்பும்போது அந்த உடலுக்கான உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை . இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்க்கிறது. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார

The Madurai Bench of the Madras High Court was on Friday informed that the body of the Pudukkottai fisherman who died at sea following a collision with a Sri Lankan naval vessel had no ante mortem injuries. Justice...

Madurai: The Madras high court was on Friday informed that no ante-mortem injuries were found on the body of the Pudukottai fisherman who died after a fall into the sea following a collision of his boat with a Sri...

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் அவரது உடலில் காயங்கள் இல்லை என உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கப்பல் இடித்து மீனவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்கிரணின் உடல் முதல் உடற்கூறாய்வுக்கு பிறகு தைக்கப்படாமலும், உடை அணிவிக்கப்படாமலும் இருந்தது என்ற தகவலும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசை தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், அதற்கான நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படைக்கு பயந்து கடல் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார் மீனவர் ராஜ்கிரன். அதன்பின்னர் மீனவர் ராஜ்கிரன் உடல் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டது. ஆனால் மீனவர் ராஜ்கிரணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கை கடற்படை கப்பலில் இருந்து கடலில் மூழ்கி இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்கிரணின் உடல் , உடற்கூறு ஆய்வுக்கு பின் வைக்கப்படாமல் உடைகள் அணிவிக்கப்படாமல் இருந்தது என்றும் கூறப்படுகிறது. இதனால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீனவர் மனைவி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசை தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மீனவர் ராஜ் கிரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என மனைவி பிருந்தா தொடர்ந்த வழக்கில் இத்தனை உத்தரவினை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

கடந்த 21.11.2021அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை. இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது. திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. - ஹென்றி திபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது! கடந்த 21.11.2021 அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை. இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது. திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்
