for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோவை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்தனர்.

 

சென்னை ஐகோர்ட்டில், மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி டிபேன் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் கடந்த ஆண்டு மே 22-ந்தேதி போராட்டம் நடத்தினர். அப்போது கண்மூடித்தனமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 

 

மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ராமலிங்கம், ‘சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பை சேர்ந்த நிர்வாகியிடம் இரண்டரை மணி நேரம் விசாரித்துள்ளார். விசாரணை முழுவதும் ஹென்றி டிபேன் என்பவர் யார்?, அவருக்கு எத்தனை குழந்தைகள்?, எத்தனை குடும்பங்கள்?. இந்த வழக்கில் வக்கீல் சுதாராமலிங்கம் பணம் எதுவும் வாங்காமல், ஏன் இலவசமாக ஆஜராகி வாதாடுகிறார்? என்றெல்லாம் வழக்கிற்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டுள்ளார்’ என்றார்.

Full Media Report



Join us for our cause